ஞாயிறு, 24 மே, 2020

திருநெல்வேலி மேலப்பாளையம்...
எங்கள் தெரு....
அதன் வயது 125 ....
ஒரு காலத்தில் அதுக்குப்பேர்
ஐயர் தெரு...
ஐயர் தோட்டம்....
அங்கே மேற்கே பிள்ளையார்
கோவிலும் .....
கிழக்கே கந்த கோட்டமும்
இன்றும் உள்ளன.
1895 ஆம் ஆண்டு
ஸ்ரீசுப்பய்யர் என்கிற பெரியவரும்
இன்னும் 2 நபர்களும்
சேர்ந்து என் தந்தையின்
பாட்டனார் உள்ளிட்ட
3 பேர்களிடம்
தெருவை விற்றுவிட்டு
குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே...அக்ரகாரம் அமைத்தார்கள்....
அது ஒரு பெரிய வரலாறு.
எங்கள் வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் உள்ள இந்தக்கோவில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அந்தக்கோவிலின் முகப்பு பார்த்துத்தான்
முக்கிய சாலைகளுக்குச் சென்று கொண்டுள்ளோம்...
முஸ்லிம்களைத் தவிர...
வேறு சமூகங்கள் எவரும்
கோவிலைச் சுற்றி இல்லை.
அந்தப் பெரிய ஐயர் அவர்கள் ...நிலத்தை விற்பனை செய்யும் போது எங்கள் முன்னோர்களிடம்....
" இந்தக்கோவிலுக்கு, எந்த மரியாதைக்குறைவும் வாராமல் பார்த்துக்கோங்க...."
என்று கண் கலங்கிச் சொன்னதை ,
எங்கள் முன்னோர்கள் தொடர்ந்து
எங்களிடம் சொல்லிவைத்துச் சென்றுள்ளார்கள்...
அது இன்றும் தொடர்கிறது.
இந்தக் கோவிலுக்குப் பின்னே....50 அடி தூரத்தில் பள்ளிவாசலும் அமைந்துள்ளது...
மாலை நேரங்களில் எங்கள் குடும்ப மூத்தவர்கள்,
முஸ்லிம் குடும்பங்களைச்
சேர்ந்த
பெரியவர்கள், இளைஞர்கள்
இங்கே கூடுவது வழக்கம்.
எங்கள் தெருவின் வரலாறு..... மதநல்லிணக்கத்தை, பிறர்க்கு சொல்லிக்காட்டுகிறது.

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகள்