புதன், 4 டிசம்பர், 2013

ஒரு செல்போன் அழைப்பும், நாய் கடி ஊசியும்..


“அப்பாட .......ஒரு மட்டும் இந்த ஊசிய  போட்டு முடிச்சாச்சு.....இனி கவலை இல்லை.....வெளி ஊர்களுக்கு தாராளமா போயிட்டுவரலாம் ”.....என்று  எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்..

எனக்கு சின்னஞ்சிறிய வயசில் இருந்தே ஊசின்னா,ஒரு பயம் தான்.”அது இப்போ வரை இருக்கிறதா”? அப்படீன்னு யாரும் கேட்டுறப்படாது. அப்படி யாரும் கேட்டா? “ஆமா இப்பவும் அந்த பயம் இருக்கு” ன்னே சொல்லலாம்.

அதிலும் அந்த நரம்புல போடுத ஊசி இருக்கே....,அத பார்த்தாலே, தானா நடுக்கம் வரத்தான் செய்யுது....

ஊசியை குழந்தைங்க பிட்டியில டாக்ட்டரோ,நர்சம்மாவோ சொருகும் போது அந்த வலியத் தாங்காம,அதுக சத்தம் கொஞ்சநேரம், நின்னுதான்,அழுகை வெளிய வருது....மாசக்கணக்கும்,வருஷக்கணக்கும் வச்சி,  பிள்ளைகளுக்கு ஊசியைக் குத்தி தொலைக்கிறாங்க.....அதுக படுற கஷ்ட்டத்தப் பார்த்துட்டு இனி எதுக்கு இந்த கொடூர ஊசி போடணுமா?.....போதும் அப்படீன்னு நினைக்கத் தோனும.. கூடவே, ,இளம் பிள்ளைவாத ஊசி, அம்மை நோய் தடுப்பு ஊசி,வலிப்பு தடுப்பு ,நோய் எதிர்ப்பு  மாதிரி உள்ளத போடாம இருக்க முடியாதே என்று மனசில் பதிலும் வரும். அந்த வலியும் வேதனையும் நன்மைக்கு தானேன்னு பிற்பாடு நினைக்க வேண்டியது உள்ளது..

  இந்த ஊசிக்கு பதிலா வேற எதுனாச்சும் கண்டு பிடிக்க மாட்டுக்காங்களே.....இது டாக்டர் ஊசியத்தூக்கும் போதெல்லாம் மனசுக்குள்ளே.....வரத்தான் செய்யுது. வருங்காலத்தில் கண்டிப்பா வரத்தான் போவுது..

என்ன?.....இப்படி ஊசிக் கதையா இருக்கே?....அப்படீன்னு கவலைகள் வேண்டாம்..நான் சொல்லுறேனே, அதுக்கு காரணம் இருக்கு.

இந்த செல்போன் படுத்துற பாடு, என்ன மாதிரி ஆட்களால தாங்கவே  முடியல்ல..ஏந்தான் இது கிட்ட பழகி,நம்பரைவச்சிகிட்டோமோ?,அப்படீன்னு பலமுறை கவலைப் பட்டுள்ளேன்..

எனக்குத்தெரிந்த தொழில் அதிபர்கள் பலர், இன்று வரை செல் போன் இருக்கிற கதையை, மற்றவங்களுக்கு சொல்லுவதேயில்லை...யாருக்கும் அந்த நம்பர் தெரியவும் செய்யாது.
 “ இந்த செல் போன் என்பதே, நம்ம அவசரத்துக்கு,தேவைக்கு  நம்ம ஆபீசுக்கோ, வீட்டுக்கோ பேசத்தான் வச்சிருக்கோம்......மற்றவர்கள் நம்மிடம் பேசனும்ன்னா,வீட்டுக்கோ,அலுவலகத்துக்கோ உள்ள போனில் வரட்டும்.  நமது நம்பர் மிக முக்கியமானவர்களுக்கு மட்டும்     தெரிந்தால் போதும்....எல்லா சூழ் நிலைகளிலும் , நாம் போகுமிடமெல்லாம் மற்றவர்கள் ஏதாவது கேட்டோ,பேசியோ அதன் மூலம் தொல்லைகள் தர  வேண்டாம்” என்று ஒருமுறை செய்யது பீடி முதலாளி பத்ஹூர் ரப்பானி அவர்கள் சொன்னார்கள்,  ... அந்த முறைதான் சரி.

இப்போ நம்ம செல் நம்பரை வைத்து வருகிற குறுஞ் செய்திகள் தரும் பாடுகள் தாங்க முடியவில்லை. பெண்டு,  பிள்ளைகள் கைகளில் செல்லைக் கொடுத்து தொல்லைகள் கண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதுக்காக பெரிய்ய பட்டி மன்றமே நடத்தனும்.அப்ப தான் சரியா வரும். செல்லால ஆம்பிளை பையங்க  கெட்டுப் போறாங்களா?......இல்லை பொம்பிள்ளைகளா?

அத பேச மட்டுமா வச்சிருக்காங்க?......இப்ப உள்ள போணில்  ஒரு கம்யூட்டரில் உள்ள, வசதிகள் எல்லாம் வந்துருச்சே...சின்ன வயசுக் காரங்க  அத பயன்படுத்துற விதத்தை சொன்னால் தாங்காது.....அவ்வளவு அனாச்சாரம்,.....அசிங்கம்.....புள்ளைகளைப் பெத்தெடுத்தவங்க ரொம்ப கவலையா கண்காணிக்க வேண்டியது உள்ளது,

கைல வச்சிருக்கிற போன் வெலைய வச்சு, இதுல கவுரவம் வேற.

ஐயோ....இந்த வாட்ஸ் ஆப் வந்தாலும் வந்தது......பல மேதாவிகள் தினசரி காப்பி பேஸ்ட் செய்து.... படங்களும் வீடியோவும் அனுப்பி காசையெல்லாம் செல்போன் கம்பெனிக்கு புடிங்கிக்  கொடுத்திடனும்ன்னு வைராக்கிய வெரி பிடிச்சு அலைகிறார்கள்...

தினசரி என்னை ஒவ்வொரு குரூப்பில் சேர்த்து அவர்கள் படுத்துகிற பாடு கொடுமையோ கொடுமை....சில முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளத்தானே இந்த வசதி....அதையேன் இப்படியாக்கிட்டாங்க....?

போனை வச்சி மத்தவங்களுக்கு என்ன வந்துச்சோ? அது பத்தி நிறைய கேள்விப் படுகிறேன்..ஆனா எனக்கு மாசா மாசம் ஆயிரக் கணக்கில் செல் போன் கம்பெனி பில் அனுப்பி, கட்டிக் கிட்டு இருந்தேன்....இப்போ டாக்ட்டர் கிட்ட பில் கட்டுகிற வரை கொண்டு விட்டு விட்டது....

வழக்கமா தினமும் காலை நேரங்களில்,போன் பேசவே,   ஒரு மணி நேரம் போய் விடுகிறது....முக்கியமான கூட்டங்களில் இருக்கும் போதோ,கார் மோட்டார் சைக்கிளில் நானே ஓட்டும் போதோ,செல் போனை நான் கண்டு கொள்வதே இல்லை....மிக முக்கியமானவர்கள் அழைத்தால் நின்று பேசி,தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்த பின்னர் தான் மத்த வேலைகள் எல்லாம்..

திருனவேலி போலிஸ் படுத்துற பாட்டில், தலைக்கு போட்டுள்ள ஹெல் மெட்டுக்குள், மோட்டார் சைக்கிள் சத்தம், மற்றும் போக்குவரத்து இரைச்சலைத்தாண்டி  கேக்கிற அளவு, அழைப்புச் சத்தம் அதான் ரிங் டோன் உள்ள செல் போனை, இன்னும் யாரும் கண்டு பிடிக்காததுக்கு, என்னை மாதிரி ஆட்கள், நன்றி தான் சொல்லணும்.

அம்புட்டுத் தொல்லை..... ." நான் ட்ராபிக்குல நிக்கேன்......பைக் ஓட்டுறேன்,கார் ஒட்டுறேன் " னு சொன்னாலும் சில பேர்கள்  வலுக்கட்டாயமா விடுறதே இல்லை......அவங்க என்ன காரணத்துக்காக அழைக்கிறாங்களோ அதச்சொல்லி முடிச்சுதான் ஆள விடுறாங்க...

இப்பிடித்தான் ஒரு நாள் காலை தோட்டத்தில் இருக்கும் போது ஒரு புண்ணியவாளன் வெளி நாட்டில் இருந்து என்னை அழைச்சான்....அவன் நம்பரும் அதில் வரல்லை......
,நாம் எங்கே, எந்த சூழ்நிலையில் , என்ன  வேலையில் இருக்கிறோம் என்பதை செல்போனில் கூப்பிடுகிற நண்பர்கள்  அறிய மாட்டார்கள்.  

அலுவலகத்தில்,அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கு போன் அழைப்பு வந்தால், உட்கார்ந்தோ,அல்லது வீட்டுக்குள் நடந்து அல்லது இருந்து கொண்டு பேசலாம். செல்போன் கதை ரொம்ப வித்த்யாசமானது.

லேண்ட் லைன் போனில் மட மடன்னு பேசி முடிக்கிற நண்பர்கள் சிலர் கம்ப்யூட்டர் புண்ணியத்தில் விடாப்பிடியாக பேசுறாங்க,.....பேசுறாங்க.பேசிக்கிட்டே இருக்காங்க. ........... .......தாங்க முடியவில்லை....

அன்னைக்கு அதமாதிரி ஒரு பேச்சு......அந்த நண்பருடன் பேசிக்கொண்டே, நடந்து போன நான் ஏதோ ஒரு கவனத்தில்  மரத்தடியில் ஒரு ஓரமா நிப்போமுன்னு கண்ணை முன்னால வச்சிக்கிட்டு, காலை பின்னால் எடுத்து வச்சேன்....அப்புறம் தான் தெரிந்தது, நான் கீழ பாக்காம கால வச்சது.... அங்க படுத்துக் கிடந்த நாய் வயித்திலன்னு.

எண்பத்தைந்து   கிலோ எடையை ,  தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த  நாய் , எப்படி திடீர்ன்னு தாங்க  முடியும்? கண்ண முழிச்சு பார்க்கிறதுக்கு முந்தியே வள்ளுன்னு ....சப்தத்தோடு உர்ர்ன்னு ஒரு உறுமல் உறுமி  “ “லபக்குன்னு” வாயைத்திறந்து ...அப்போதைக்கு கிடைச்ச என்  காலில் கோபத்துல ஒரு கடி கடித்தது....

பெறகு நான்  நான் குதிச்ச குதியில்..... மேற்கொண்டு என்னை அது கடிக்காம ஓடியே போய் விட்டது.......அது வரைக்கும் சந்தோசம் தான்..அப்புறம்என்ன?.....ரத்தம்வந்தது.....வலியும் வந்தது......கூடஇருந்தவர்கள் பதறிப் போய் விட்டார்கள்.....தோட்டத்தில் இருந்து புறப்பட்டு, மேலப்பாளையம் டாக்டர் பிரேமச் சந்திரன் அவர்களிடம் வந்தேன்...

அங்கே இருக்கும் போதே, என் தாயாரிடமும், மனைவியிடமும், நாய்க்  கடிக் கதையை போனில் சொன்னேன்...அவங்க இருவரும், சொல்லி வச்ச மாதிரி ” அய்யய்யோ தொப்பிளை சுத்தி நிறைய ஊசி போடணுமே?.......கறி, மீனெல்லாம் சாப்பிடக்கூடாதே......பக்கத்துல வெத்திலை  வாங்கி,மிளகு வச்சி உடனே வாயில போடணும் " ங்கற, அளவு அவ்வப்போது உத்தரவுகள்  கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.....

 அமீரகத்தில் இருந்து,நாய்க்கடி பற்றிய முதல் விசாரிப்பு, என்தம்பியிடமிருந்து தொடங்கியது....

கொஞ்ச நேரத்தில் எங்க வீட்டம்மாவும் வந்தாச்சு.
" இப்பிடியா நாயோடு விளையாடுவது" ன்னு?......கேள்வியே கேக்காமல் கடுமையான விசாரிப்பு......நான் பதில் சொல்லி முடித்தேன்..போனில் கூப்பிட்ட ஆளை மட்டும் கடைசி வரை,சொல்லவே இல்லை....ஆனாலும் தொப்பிள் ஊசி பயம் மட்டும்  வந்து வந்து போனது......

கையில பிட்டியில,நரம்புல ஊசி போட்டிருக்கோம் . வயித்தில ஊசி போட்டு பழக்கமில்லையே.....அங்க  போட்டா எங்கன, எப்படி வலிக்குமோ? அப்படீங்கற ஆராய்ச்சி மனசுக்குள் பண்ணிக்கிட்டே இருந்தேன்..

நான் வந்திருப்பது தெரிந்து, டாக்டர்  வந்தார்..விபரம் கேட்டார்...
"என்ன.....உங்களை.....நாயி....கடிச்சுட்டுதா?"...
" ஆமா...சார்சார்,  அது தூங்காம இருந்தா என்னை கடிச்சிருக்காது..."
" நீங்க மிதிக்காம இருந்தா அது உங்களைக் கடிச்சிருக்காது..." 
"சார் ஊசி போடாம மருந்து மாத்திரை நாய்க்கடிக்கு இல்லியா" நான் கேட்டேன்.
"ம்ஹும்......கண்டிப்பா ஊசி போட்டே ஆகணும்....
ஆறு ஊசி போதும்..அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் " என்றார்.
அப்புறம்... காயத்தை ஆய்வு செய்து,மருந்து போட்டு கட்டினார்.

வழக்கமா அவர் பேசினாலே பாட்டு படிக்கிற மாதிரிதான் எனக்கு கேக்கும். அன்னைக்கு மட்டும் அப்படி கேக்கலை. காரணம்.... எனக்கு ஏற்பட்ட பீதி தான் .....
பக்கத்தில் நின்று கொண்டிருந்த நர்சம்மாக்களிடம் ஏதேதோ பேர் சொல்லி மருந்துகளைக் கொண்டு வரச்சொல்லி, கொஞ்சம் பெரிய சைஸ் ஊசியில் ஏற்றினார்...
எனக்கு நாய் கடிச்ச போது வாராத பயம் அப்பம் தான் வந்தது...
“சார்.....ஊசி எங்க போடுவீங்க?” சட்டையை ,பனியனோடு சேர்த்து கழற்றினேன்..
டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்...

“பனியனைத் தூக்காதீங்க......உங்க கையில் தான் ...பனியனை மாட்டுங்க.”


9 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

எல்லாம் நலமானதில் இறைவனுக்கு நன்றி.

//வேறு என்ன விசேஷம்?...... அப்புறம்?.” ...அப்படீங்கற வார்த்தைகள் மேலேயே வெறுப்பு வரும் வரை பேசுறாங்க, பேசுறாங்க அப்படி ஒரு அறுவை.......தாங்க முடியவில்லை....//

அப்படின்னு நீங்க சொல்றீங்க! ஆனா பொதுவா என்ன சொல்வாங்க தெரியுமா... ‘இவனு/ளுக்கு என்ன வெளிநாட்டில இருந்துகிட்டு ஒரு ஃபோன்கூட பண்ண முடியாதா?” என்று. இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு அழைப்பது வெகு குறைந்த கட்டணம் என்றாலும் நாம்தான் அழைக்கணும். சரின்னு பேசினாலும், “என்ன அவசரம்? கம்ப்யூட்டரில் பேசினா சீப் ரேட்தானே?” என்றும் சொல்லி, அவர்கள் வீட்டு ஆடுமாடு வரை நலம் விசாரித்து பேசவேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்!!

ஆக, பேசினாலும் குத்தம், பேசாட்டியும் குத்தம்!! வெளிநாட்டு வாசிகளாகிய “மத்தளத்துக்கு” ரெண்டு பக்கமும் அடி!! :-))))

Sandu Jahafer சொன்னது…

Assalamu alaikkum நலமா மச்சான் .தாங்கள் சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல அல்லா அருள் புரிவனாகவும் ஆமீன்

Vijayavel Kathirvel சொன்னது…

//“சார்.....ஊசி எங்க போடுவீங்க?” சட்டையை கழற்றினேன்"//
நல்ல வேளை தொப்பிளை சுத்தி ஊசி இல்லை.

aboobacker சொன்னது…

kakka,superb writing.keep up ur writing.As u said ,everyone is escaping from overseas call nowadays, and mobiles are nuisance at sometime.

ஹுஸைனம்மா சொன்னது…

இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன். பேச்சிலர்களாகத் தனியே இருக்கும் ஆண்கள் இம்மாதிரி அடிக்கடி ஊரில் உள்ளவர்களை அழைத்துப் பேசுவார்களாயிருக்கும். அது, ஊரைவிட்டு, உறவைவிட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கத்தின் வெளிப்பாடு என்றே எண்ணுகிறேன். அடிக்கடி பேசுவது தன் தனிமையைப் போக்கிக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம். விதிவிலக்குகள் உண்டு. இருதரப்பும் அடுத்தவரின் நேரத்தை விரயம் செய்யாவண்ணம் புரிந்து நடந்துகொள்ளல் நன்று.

Gazzali Gazzali சொன்னது…

Dog bit a man. this is not news but man bit a dog.This is news. you did not mention whether the dog bit you or not

Gazzali Gazzali சொன்னது…

Dog bit a man. this is not news but man bit a dog.This is news. you did not mention whether the dog bit you or not

Hilal Musthafa சொன்னது…

தம்பி! இறைவன் அருளால் தாங்கள் நலமாக இருப்பீர்கள் என்று பூரணமாக நம்புகிறேன். நாய் தானாக வந்தும் கடிக்கும் நாமாக அதைக் கடிக்கவும் வைப்போம். எப்படி நடந்தாலும் கடிக்காயம் நமக்குத்தான். உங்கள் பயத்தைப் போல ஊசிக் குத்தலும் நம் மேனியில்தான் நடக்கும். நாய்பாட்டுக்கு பல்லால் நம் உடலில் குத்திவிட்டுப் போய் விடுகிறது.

நாம் தவணை முறையில் ஊசிக் குத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்வு எனக்கு வேதனையைத் தந்தது. அதனால் இறைவனைப் பிரார்த்தித்தேன். நீங்கள் சொல்லி இருந்த விதம் என்னை இப்படி எழுதச் சொன்னது. அதனால் இதை எழுதி இருக்கிறேன்.

உடல் நலத்தை நன்றாகப் பேணிக் கொள்ளுங்கள். இறைவன் நிச்சயமாக அருள் புரிவான்.

Vst Basheer சொன்னது…

அடிக்கடிஉங்கள் வாழ்க்கையில் நாய்குறு கிடுகிறதேஎன்ன விசயம் .பல முறை துரத்தி இருக்கிறது .இபோதுகடித்து இருக்கிறது