வியாழன், 18 ஏப்ரல், 2019

ஓங்க கூட ..மனுஷன் வருவானா?



நாய்க்கும் நம்மளுக்கும் ...அதென்ன நம்மளுக்கும் ? இல்லையில்லை.... நமக்கும் .....நமக்கும் எதுக்கு? நாய்க்கும் எனக்கும் உள்ள தொடர்பு  கொஞ்சம் .....நீட்டமானது.

எங்க ஊர் பக்கம் நீளத்தை நீட்டம்ன்னு சொல்லுவாக....அதுங்க பேர்ல எனக்கு பாசம் கூடுதலாகவே உண்டு.

ஏற்கனவே ஒரு நாயை வளக்க நான் வாங்கி....அது தப்பி வந்த நாய்ன்னு தெரிஞ்சு அத அந்த நாய் ஐயாக் கிட்ட சேர்க்கிறதுக்குள்ளே ....எச்சிப்போச்சு....அது தனிக்ககதை.
ஆனா இந்தக்கதை வேற......
எங்க வீட்ட்ல உள்ளாளுங்க.... நாயை நான் தொட்டேன்னு தெரிஞ்சாலே சம்மதிக்க மாட்டாக.எழு முறை கைகால்களைக் கழுவிவிட்டு தான் சோறு திங்க வரணும்ன்னு  சொல்லிடுவாக.
ஆடம்பரத்துக்காக நாய் வளர்க்கக் கூடாது....தோட்டக்காவலுக்கு.... நாய் வளக்கலாம்ன்னு....மார்க்க வெவரம் சொன்ன பிறகே ....கொஞ்ச காலத்துக்கு பெறகே சத்தங்காட்டாம இருகிறாக.

ஒரு நாள் தருவை வயக்காட்டுல.... வரப்பு ஓரமா.... என் கால் பக்கம் ....நின்ன நல்ல பாம்பு வேகமா வந்துக்கிட்டு இருந்துச்சு  ....அத பார்த்த பொறவு...நான் அதிர்ச்சியில நிக்க ... எங்கிட்ட பாம்பு வாறதுக்கு முந்தியே....கிட்ட நின்ன நாய் ஒன்னு....அத ஒரே கவ்வு தான்...தலையில்  இருந்து ஒரு சாண்....தூரத்தில் அந்த பாம்பை வாயில் வச்சிக்கிட்டு ...அங்குமிங்கும் உலுப்பிக்கிட்டு ....ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.      அந்த நாயால் வேற யாரையும் கூப்பிடக் கொள்ள முடியாம.....அதுக்கப்புறம் ஆங்காரமா ஆக்ரோஷமா ...கடிச்சுக் கொதரிக்கொண்டு இருந்தது.....நாய் பிடிச்ச பிடிப்பில் கடிச்ச கடிப்பில்....அந்த பாம்பின் வாழ்வு முடிஞ்சே போச்சு.

அந்த சாயங்காலப் பொளுதில் பாம்பை புடிச்சு , கடிச்சு என்னை நிக்க வச்ச நாய்க்கும் எனக்கும் பெருசா எந்த பந்த பாத்தியமும் இல்லை....எப்பவாச்சும் நான் வக்கிற சோத்தை....பிஸ்கோத்தை திங்கும்.அப்புறம் போய்டும்.ஆனாலும் அன்னைக்கு அந்த நாய் தான் பாம்புக்கடியில் இருந்து .....அது வாய்ல புடிச்சிட்டு போச்சுது. ஏற்கனவே நாய்ங்க பேர்ல இருந்த பாசம் இன்னும் கூடி விட்டது.
ஒரு நாள் எங்க ஊர்ல ஒரு கடையடைப்பு....அன்னைக்கு பார்க்க ஊரே அடங்கிப்போய் .....ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாமல், அமைதியாய் ....இருந்தது.

அதுவும் ராத்திரி எட்டரை மணிக்கே அந்த நிலைமை.
நான் எங்கோ போய்விட்டு அம்பாஸிடர் காரில் எங்க ஊர்  ..பசார்ல கார்கள் நிறுத்தப்படுகிற இடத்தில் ..எங்க புகாரி அண்ணன் நிக்கிறதை பார்த்துவிட்டு காரை நிறுத்திவிட்டு இறங்கினேன் .
எங்க அண்ணனிடம்   .எதோ பேசிமுடித்துவிட்டு கார்கதவை திறந்து நாங்கள் இருவரும்  உள்ளே ஏறப்போற சமயம்......எங்கிருந்தோ ஒரு நாய் வந்து உரிமையோடு...... நிதானமாக உள்ளே ஏறி ....பின் இருக்கையில் பின்னங்கால்களை  மடக்கிக்கொண்டு ...முன்னங்கால்கள் இரண்டையும் நிறுத்தி .....உட்கார்ந்து கொண்டது.....அது உட்கார்ந்து இருந்த தோரணை....என்னவோ அது வளர்ந்த வீட்டுக்காரில் அப்படி உட்காருமோ அப்படி இருந்தது .

கொஞ்சம் சந்தன நிறம்கொண்ட வனப்பில்  அது.....நல்ல வளர்த்தியா.....ஒசரமா....இருந்தது...நல்ல பசியில் இருப்பது போல கெறங்கிப் இருந்தது..நாக்கை வெளியே தள்ளி மெல்லிய குரலில் முனங்கிக்கொண்டு இருந்தது.

இது வெல்லாம் பார்த்து எங்க அண்ணன் .....காரைவிட்டு தூரமா....கொஞ்சம் உஷாரா....முன் ஜாக்கிரதையா..... நின்னுக்கிட்டு இருந்தான்.


நான் எவ்வளவோ சத்தங்காட்டியும் ,  கதவைத் திறந்து விட்ட பின்னரும் அந்த நாய் வெளியே வராமல் சத்யாக்கிரகம் செய்தது....

அவனும் சப்தம்  போட்டு பார்த்தான்..தோ...தோ...ன்னு கூப்பிட்டுப்பார்த்தான்.

 ம்ஹும் ஒன்னும் நடக்கவில்லை.

மிரட்டி,வெரட்டி பார்க்க கம்புகள் ஏதும் அங்கு கிடைக்கவும் இல்லை.
அதுவும்  உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அப்புறம் நானும் அவனும் என்ன செய்யலாம்ன்னு ஆலோசனை செய்தோம்.

இந்த நாயை என்ன செய்ய?....
" டே....நம்ம தோட்டத்தில் கொண்டு போய்விட்டுருவோம்.....அங்கே நிக்கிற மத்த நாய்களோடு இதுவும் ஒன்னுமன்னா இருந்துவிட்டு போகட்டும்."....அப்படீங்கிற ஒரு முடிவுக்கு வந்தோம்...

 " சரி கெளம்பலாம் ...உள்ள ஏறு " என்று நான் சொன்னேன்.

" ஏய்...என்ன வெளாடுரியா?.....நான் வரல்ல.....அது நாக்க நீட்டிக்கிட்டு நிக்கிற நெலையே..... ஒரு மாதிரியா இருக்கு ........அது பார்க்குற பார்வையே சரியில்லை...அந்த நாய் கூட ....இல்ல... நான் உங்கூட வரமாட்டேன்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

எவ்வளவோ தைரியம் சொல்லி ப்பார்த்தேன்...ஆனால் அவனோ அந்த நாய் பார்த்த பார்வையில் முன் சீட்டில் அமரவே முடியாதுன்னுட்டான்.

எந்த வகையிலும் நம் காரை தன் காராக நினைத்துக்கொண்ட அந்த ஜீவனை , எப்படியாகிலும் நம்ம தோட்டத்திற்கு கூப்ப்பிட்டு போய்டனும்ன்னு....முடிவு பண்ணிட்டு வண்டியை நகட்டினேன்.

எங்க தோட்டம் போக ஒரு அரை மணி நேரமாவது  ஆகும்....இந்த நாய்க்கு நம்ம தோட்டத்தில் சாப்பிட இந்த நேரத்தில் என்ன இருக்கும்?.....அங்கு இருக்கிற நாய்கள் எல்லாம் தின்னு முடிச்சு இருக்குமே.....என்ன பன்னுவோம்ன்னு பலவாறா யோசிச்சுக்கிட்டு .....பாளையங்கோட்டை பெட்ரோல் பல்க் பக்கம் உள்ள ஒரு ஓட்டலில் போய்....ஒரு பிரட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன்.....

கொஞ்சம் நிதானமான வேகத்தில் காரை ஒட்டிக்கிட்டு போனேன்.சில திருப்பங்களில் காருக்குள்ளே அந்த நாயால் பேலன்ஸ் செய்ய முடியாமல் காரின் உள்ளுக்குள்ளே விழுந்தது....அப்புறம் முனகியது.அங்கு போய்ச்சேர்கிற வரையில் அதன் மூலமாக ஒரு பிரச்சினையும் இல்லை.

தோட்டம் போய் சேர்ந்தேன்..கார் கதவைத் திறந்தேன்.அந்த நாய் இறங்கியது. மிரட்சியோடு அங்குமிங்கும் பார்த்தது....அதனை வளர்த்தவன் யாரோ?.....அவனைத்தான் அது அங்கே தேடி இருக்க வேண்டும்.கண்களின் ஓரத்தில்  ஒரு ஏக்கம் தெரிந்தது.

என்னால் முடிந்தது அந்த வேளையில்...நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த ரொட்டிப் பாக்கெட்டை பிரித்து.... அங்கு இருந்த பாலை அதன் மீது ஊற்றி ....ஒரு தட்டில் வைத்தேன்.   பசியோடு  இருந்த அந்த ஜீவன் ...அதனை ருசித்து உண்டது.

அப்புறம் எங்க இசக்கி முத்து தேவரிடம்....." இதக்  கவனமா பார்த்துக்கோங்க ....மத்த நாய்ங்களுக்கும் வக்கிற மாதிரி சாப்பாடு போடுங்க" என்று சொல்லிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்....

தனிமையில் ஊரை நோக்கி என் பயணம்...." எல்லாம் சரிதான்.    நாம கூப்பிடல்லை.....இந்த நாய் தானா வந்துச்சு....வண்டியில் ஏறுச்சு....இங்க வந்து உட்டுட்டோம்.....ஆனா நம்ம அண்ணன் வர மாட்டேன்னு சொல்லிட்டானே.....அத மட்டும் சொல்லியிருந்தாலும் பரவாயில்ல...
அதோடு   சொன்னானே ஒரு சொல்லு...":உன்னோடவும்....இந்த  நாயோடவும் ...மனுஷன் ஒன்னா வருவானா?