புதன், 29 ஆகஸ்ட், 2018

" போதம் மாறிப்போச்சா?...


நடந்து ஊரை சுற்றுவது என்பது ஒரு காலம்.
 சைக்கிளில் ஊர் சுற்றியது என்பது ஒரு காலம்.

 இரண்டுக்கும் பிறகு,  மோட்டார் பைக்குகளில் ஓட்டிக்கொண்டு..... அல்லது ஒட்டிக்கொண்டு.... பின்னால் அமர்ந்து கொண்டு  போவதென்பது இப்ப உள்ள  காலம்ன்னு  ஆகிப்போச்சு.


 கொஞ்சம்.... தூர தொலைவுகளுக்கு,  கார் , பஸ் , ரயில் பயணங்கள் என்பது இருந்து , அதையும் தாண்டி விமானம் மூலம் செல்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.


 பெரும்பாலும் பெரியாத்துக்கு , அதான் நம்ம தாமிரபரணிக்கு நடந்தே சென்று குளித்து வருவதிலிருந்த ஆனந்தம் இப்போது கிடைப்பது இல்லையே ...என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

 காரணம்; சோம்பேறித்தனம் அல்லது நேரமின்மை.

 ஒரு காலத்துல.... காலங்காத்தால கருப்பட்டி சாயா குடிச்சிட்டு,  விறுவிறுன்னு பெரியாத்துக்குப் போய் குளிக்கிறேன்னு சொல்லி,....  அழிச்சாட்டியம் பண்ணுவது ...அந்தக் காலத்துல மாறாமல்  ஒரு மரபாக இருந்தது.

 அது தலைமுறைக்கு தலைமுறை மாறிக்கொண்டே இருந்தது....

 அப்படியாப்பட்ட பையங்களை,.... கல்யாண வீடுகளில் ....மாப்பிள்ளையாகி .... தொப்பி போட்டு.... தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்த .....அந்தக் காலத்து இளந்தாரி மாப்பிள்ளைகளைப்  பார்த்து ...." இந்தப்பயபுள்ள என்னா..... சேட்டை பண்ணுவான் ...இன்னைக்கு இம்புட்டு அமைதியா இருக்கான்..... வாரவ ... நல்லா... இவன  கவனிச்சுடுவா ....சூடு வச்சுடுவா பாருங்களேன் "  என்று சேட்டைக்காரனுகள பத்தி அந்தக் கால பெரிசுகள் சொல்லி.... சிரிச்சி.... கொளுத்தி விடுவாங்க.

காலாலே ஊரை யளந்தது ஒரு காலம்.... இப்போ உடம்புக்காக நடப்பது தவிர வேற எதுக்கும் நடக்க முடியல்ல.
அது தான் தொலையுது ....சைக்கிளிலாவது போலாமான்னு போனா.....என்னத்தையோ ......எதையோ தொலச்சவனை பார்க்கிறது மாதிரி பார்க்கிறாங்க.

மோட்டார் பைக்கில் ஊரைச்சுற்றுவது இப்பவெல்லாம் சவுகரியமா போச்சு.....ஸ்கூட்டார் சத்தங்காட்டாம போறதுக்கு லாயக்கு.

ஊருக்குள்ள ஞாயிற்று கிழமை  காலையில் குறிப்பா கல்யாணக்காலங்களில் பைக்கில் போய் வருவதற்கு ரொம்பா பொறுமை அவசியம்.

பிரஷர் மாத்திரை போட்டுக்கிட்டு ஊர்ல.... லாந்துகிற ஆசாமிகள்.... ஒட்டிக்கு ரட்டியா ...மாத்திரைகள் போட்டாத்தான் கோபம் வராது....எங்க இருந்து எவன் வாறான்னே தெரியல்லே.... . பசார் ரோடு முச்சூடும் கண்ட இடங்களில் எல்லாம் வண்டிகளை விட்டுட்டு போறோமேன்னு.... கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி வருவதில்லை.

முன்னவும் போகாம....பின்னவும் உடாம.... ரோடுகளில் அம்புட்டு நெருக்கடி.

ஊர்ல....மோட்டார் சைக்கிள் பெருத்துட்டு...." ஊட்டுக்கு ....ரவ்வண்டு...மும்மூனு பைக் இருந்தா....யா..ன் இவ்வளோ நெருக்கடி வராது?....இது ஹயாத் நூர் ஆட்டோ மாமா சொல்லுறது.

" இல்லங்கோ.....ஆட்டோவும்.... சேர் ஆட்டோவும் ....தான்" இடையில் ஒரு குரல். .

இதுக்கிடையே....காயிதே மில்லத் பள்ளிக்கூட ரோட்டில் குண்டுத்தெரு  வளவில் வேணி பஸ்காரன் வந்துட்டா.....கேக்கவே வேணாம்.....சண்டையில்லாமல் ஒரு நாள் கூட கழியாது.

கிட்டத்துல எங்காவது போறதுக்கும்....ஊர்ல கல்யாணம் காட்சின்னு வந்துட்டா....அங்க போறதுக்கும் வீட்ல  பைக்  இருக்கு.

பைக் கிடைக்காம பட்ட பாடு பத்தி ....அந்தக்  கதைக்குத் தான் நான் இப்ப வாறன்.

ஒரு நாள் ..ஒரு முக்கியமான கல்யாணம்.
நிக்காஹ் எங்கன்னா.....ஜின்னா திடல் மேக்கே....மகுனால் அஸ்பியா மதரசா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளிவாசலில்.....அதுக்குத் தயாராயி ....வெளிய வந்தா...அங்க போறதுக்கு எனக்கு பைக் இல்ல.....எங்க மகன் அத தூக்கிட்டு போயாச்சு.

கல்யாணம் நடக்கிற இடம் பக்கம் தான.... அங்க போறதுக்கு.... எதுக்கு கார்?....அப்படீன்னு மனசில் ஒரு எண்ணம்.
என்ன செய்யன்னு யோசிச்சேன்.

அப்பத்தான்.....மேற்க பார்த்தேன்.எங்க பெரியப்பா வீட்ல புகாரி அண்ணன் வாசலில் நின்னுகிட்டு இருந்தான்.

" உங்கிட்ட ...வண்டி ஏதாச்சும் இருந்தா...கொடம்பா ....பக்கத்தில் ஒரு கல்யாண வீட்டுக்குப்  போகணும்."

"எடுத்துக்கோ....உனக்கு சரிவருமான்னு....பார்த்துக்கோ, ஸ்கூட்டி தான் இருக்கு.....அத ஒட்டுவல்ல....?"என்று அந்த பழைய  வண்டியை தந்து விட்டான்.
அது பொம்பள பிள்ளைகள் புழங்குவது ...என்று பார்த்தவுடன் தெரிஞ்சுது.

" வேற வண்டி இல்லியாடே?..."

" இல்லியப்பா..." என்றான் அண்ணன்.

மதரசா....போயாச்சு.அங்கே வாசலில் ....அந்த வண்டிய நிறுத்திட்டு....நிக்காஹ் ல கலந்துகிட்டு....அங்கு வந்த நட்புகளிடம் பேசிவிட்டு....அங்கு நின்ற வண்டியில் ஏறி ...எங்கிட்ட இருந்த சாவியை போட்டு....ஸ்டார்ட்  பண்ணி ....பழையபடி வீட்டுக்கு வந்தாச்சு.

தெரு முகப்பில் இருந்த அண்ணன் வீட்டு வாசல் பக்கம் நிழலில்  வண்டியை நிப்பாட்டிட்டு....அவங்கிட்ட சாவியை கொடுத்தேன்.

" எப்பா....ஓன் வண்டி...பழசா இருந்தாலும் ....என்னமா போகுது....என்ன வச்சு ...நல்ல வேகமாத்தான் இழுக்குது என்றேன்.

அப்போது தான் அவன்...நான் கொண்டு வந்தா வண்டியை உத்து பார்த்தான்....
"ஏ...இது யார்வண்டி?....."என்று கொஞ்சம் அதிர்ச்சி கொண்டு கேட்டான்.

" போதம் மாறிப்போச்சா?....ஓங்கிட்டத்தானே வாங்கிட்டுப்போனேன்"

:" அடேய்.....அது வேற வண்டி...நீ இப்ப கொண்டு வந்துறக்கியே இது வேற வண்டி....."
"யாரு சொன்னா?....நீ தான இந்த வண்டிய தந்தே"....
. " அய்யய்யய்யோ...இந்த வண்டி நம்பர பாரு...இத வேற வண்டின்னு சொன்னா நம்ப மாட்டுக்கிறியே...."

எனக்கு...கொஞ்சம் கொழப்பம் ...வர ஆரம்பிச்சுது....என்ன இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறான்?....
இவன் வண்டி இல்லன்னா இது யாரு வண்டி?

அவன் தந்த சாவியைப் போட்டுத்தானே   ஸ்டார்ட் பண்ணுனோம்...?

" என்ன.... எடக்கா பண்ணுதே....இந்தப்பாரு.....இந்த சாவி நீ தந்தது தான? "

" ஆமா...நான் தந்தது தான்....ஆனா வண்டி எங்க வண்டி இல்லையே...."என்றான்.

என்ன ஆச்சுது?....என்ன நடந்தது....என்ன செய்வோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

" சரி ...வா.... நான் எங்கே  இந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன்னு காட்டுதேன் வா" ...என்றேன்.நான் அந்த வண்டியை எடுத்த இடத்தைக்காட்ட கூட்டிச்சென்றேன்.

" டே...இங்க பாரு,  வண்டி புதுசா வேற இருக்கு....நல்லா யோசிச்சுப் பார்த்துக்கோ...ஓன் வண்டி தானான்னு?... ஏன்னா....உங்க வீட்ல அஞ்சாறு வண்டி இருக்கு...." என்று என் முதுகுப்பக்கம் இருந்த அண்ணனிடம் சொன்னேன்.

" என்னடா...உன்னோட வம்பாப் போச்சு....இல்ல....இது நம்ம வண்டி இல்லப்பா" ...என்று சொல்லி முடித்தான்.

கொஞ்ச நேரத்தில் ....மகுனல் அஸ்பியா போய் சேர்த்தோம்..போய் சேருகிற வரையும் பொலம்பித் தள்ளிட்டான்...எப்பிடி வண்டி தெரியுமா?....என்ன மைலேஜ் கொடுக்கும் தெர்யுமா?....நான் பதிலே பேசாமல்...அடுத்து நடக்க வேண்டியதை யோசித்துக்கொண்டு ....இருந்தேன்.
மீராப்பள்ளி ....அந்த முக்குச்சந்து திரும்பி ....மதரசா மரத்து நிழலைப் பார்த்தேன்....

அங்கே.....இந்த மாதிரி ஒரு  வண்டி மட்டும் ...அப்படியே...தனியே  நின்று கொண்டு இருந்தது.

வேற எவராவது...வண்டிய காணோம்ன்னு ...நிக்காங்களான்னு...நைசா ஒரு பார்வை பார்த்துக்கிட்டான்.....அந்த முழியில் அவனையும்....அவன் வண்டியையும் பார்த்து ...நான் சிரிச்ச சிரிப்பு...
எங்க புகாரி காக்கா....காலமெல்லாம் மறக்க மாட்டான்.

" என்ன எழவு வேலைப்பார்த்தே .....எவன் வண்டிய மாத்தி எடுத்துட்டு வந்தே...?"