வெள்ளி, 18 அக்டோபர், 2013

கனவுகள் காணும் கன்னியர்கள் .....




  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் பேரால் வாழ்க்கைத்துணை அமைய
    தடைகள், இருப்பதில்லை...ஆனால் மேலப்பாளையத்தில் இது...... தாண்டவ மாடுகிறது....

    எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு பெண் மக்களை,படிக்க வைக்கிறார்கள், பட்டதாரிகளாக,என்ஜினியர்களாக்குகிறார்கள்......ஆனால் அவளது பணி?......பெரும்பாலும் அடுப்படியில் தான்.....

    சில சம்பந்தங்களில் "பொண்ணு வேலைக்கெல்லாம் போகக் கூடாது", என்று கண்டிசன் போட்டே திருமணம் நடக்கிறது....

    அண்மையில் "அரசு வேலை கிடைத்த பெண் வேண்டாம்", என்று ஒரு சம்பந்தமே நின்று போய் விட்டது....

    மாப்பிள்ளைகளோடு வெளிநாடுகளில் பணி செய்ய்கிற வாய்ப்பு மிக,மிக குறைவானவர்களுக்கே கிட்டுகிறது..

    நம்மூர் பெண்மக்கள், வெளி ஊர்களில் குடும்பத்துடன் தங்கி படித்து பட்டதாரிகளாகி.... மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை தேடினால்....அந்த சம்பந்தத்தை அந்நியமாக பார்ப்பதைக் கேட்டு மிக வருத்தப் பட்டேன்...

    தந்தை மறைந்து, தாயின் பாதுகாப்பில் படித்து பட்டம் பெற்ற பெண் மக்களின், கண்ணீரும் கேள்விப்படும் போது மனது படாத பாடு படுகிறது.

    பெண்மக்கள் கல்வியில் முன்னேறினால் தான் வீடும் நாடும் முன்னேறும்.
    வரும் காலம் இன்டர்நெட், எல்லாவற்றையும் இணைக்கும் காலம்.

    சாதாரணமான போன் பில் முதல் வங்கிக்கணக்கு ட்ரான்ஸ்பர் வரை,எல்லாவற்றையும் நெட் மூலமாகவே செய்கிற காலம் வந்துவிட்டது....

    அதற்கு ஆங்கில மற்றும் அடிப்படை அறிவு, எல்லோருக்கும் தரவேண்டும் ,அவை குறிப்பாக பெண் மக்கள் பெற வேண்டும் என்று உழைக்கிற கூட்டத்தில் நானும் இருக்கிறேன்..

    படிக்கிற எதிர் கால சந்ததிகளுக்கு, நல்ல கல்வி அதிகம் தர, தாயும் தந்தையும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால் மென்மேலும் நல்வழி,காட்டமுடியும் என்பதே என் கருத்து.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...பெற்றோர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும்.....

    சமீப காலமாக..... அழகும், நிறமும், கொஞ்சம் குறைவான மணப்பெண்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் தடை படுகிறது.

    கொஞ்சம் நிறம் குறைவான பெண்களைப் பெற்றெடுத்தவர்கள்,தம் மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி அலைந்து, படும் பாட்டை......சொன்னால் பரிதாபம் தான்..இதயம் தாங்காது...

    இளைஞர்கள் அந்த பெண்மக்களையும் அவர்களின் உள்ளத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் ...அடுத்த வீட்டுப் பெண்மக்கள் அவர்கள் தம் மாப்பிள்ளைகளோடு மண முடித்துச் செல்லும் போது...."நாமும் இப்படிப் போகவில்லையே?.......அதற்கு நிறம் ஒரு தடையா ?" என்று வேதனைப் பட மாட்டார்களா?

    அவர்கள் சிவப்பாகப் பிறக்காதது யார் குற்றம்.?...ஒவ்வொருவரும் விரும்பியா கருப்பாகவோ,புது நிறத்திலோ,வெளுப்பாகவோ பிறக்கிறார்கள் ? அது தாய் தந்தை முன்னோர் " ஜீன்ஸ்"தருகிற அமைப்பு.அதுதான் உண்மை...

    அண்மைக்காலமாக மகரைக் கொடுத்து மணம் புரியும் இளைஞர்கள் பெரும்பான்மை ஆகி விட்டார்கள்.

    வரதட்சணை கொடுமையை அனாச்சாரங்களை .... தூரவீசி, எறிந்து விட்டார்கள்...லட்சக் கணக்கில் மங்கைக்கு, மஹர் கொடுத்து மனம் புரியும், தைரியத்தை வாய்ப்பை, இன்றைய இளம் தலைமுறைக்கு அல்லாஹ் தந்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.....

    இக்கால இளைய தலை முறை, இதையும் செய்வார்கள்,... நிற பேதம் பார்க்காமல், அந்தப் பெண்மக்களுக்கு வாழ்வு கொடுப்பார்கள், என்கிற நம்பிக்கை,என் போன்றவர்களுக்கு அதிகம் இருக்கிறது....)


 

       

 

 

 

 

 

வியாழன், 3 அக்டோபர், 2013

1993ஆம் ஆண்டு.மேலப்பாளையம் க முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபுபக்கர் அவர்கள்'மீரான் நீ பள்ளிக் கூட கமிட்டிக்கு உறுப்பினராக,பாரம் தரோம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் புதிய உறுப்பினராஅதுல கையெழுத்துப்போட்டு தப்பா"என்று என்னிடம் சொல்லி பள்ளியின் கல்விக் கமிட்டி உறுப்பினராக என்னை சேர்த்துக்கொண்டார்.
என் வாப்பவிடம் சேர்மன் இப்படிச்சொல்லுகிறார் நான் கைஎழுத்துப்போடவா?என்று கேட்டேன்.
பள்ளிக்கூடத்தை எங்க வாப்பா1941ல் டி.எஸ்.எம்.ஓஉதுமான் சாகிபோட சேர்ந்து ஆரம்பித்தார்கள்.உனக்கு சேர்மன் காக்கா அழைத்து அங்கீகாரம் தருகிறார்.சரின்னு சொல்லு.ஒன்ன மனசில வச்சுக்கோ,நீ அவர் ஆளா போறே,அவர் நாலும் நாலும் பத்துன்னா நீயும் அதத்தான் சொல்லனும்,தெரியுதா?அப்படீன்ன போ.இல்லன்னா வேண்டாம்.அவர் அதிகாரம் செய்யிற இடத்தில அவருக்கு முழு ஆதரவாளனா இருக்கனும்.மனசில வேற எண்ணம் ஏதும் வரக்கூடாது தெரியுதா?என் தந்தை எனக்கு இதைத்தான் சொல்லி அனுப்பினார்.
தன்னுடைய மகன்களைவிட மேலான அன்பு அவருக்கு என் மேல் இருந்தது.
ஒரு முறை பள்ளி வளர்ச்சி நிதி வசூலிக்க மெட்ராஸ் போன இடத்தில எனக்கு கடுமையான காச்சல் வந்து ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.
சேர்மன் எம்.எ.எஸ்.அவர்கள் நீண்ட தூரம் நடந்து போய் மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார்.வேறு நபரிடம் வாங்கி வரச்சொன்னால் மருந்து வந்துவிடும்.ஆனால் நான் பட்ட பாட்டைப் பார்த்து அவரே சென்று அதை வாங்கி வந்து என்னை படுக்கையில் இருந்து தூக்கி உட்ட்கார வைத்து என் வாயில் மாத்திரைகளைப் போட்டு அவரே ஒவ்வொரு மிடக்காக தண்ணீரைத்தந்தார்.அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?என்றால் சொல்ல முடியாது.