வெள்ளி, 18 மார்ச், 2016

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவான நாட்கள் (பாகம் 2)


முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவான நாட்கள் பற்றிய தொகுப்புக்களை முகநூலில்,வலைப்பதிவில்  நான் வெளியிடத் துவங்கியது முதலே , உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும்  உள்ள தம்பிமார்கள்,  என்னிலும் மூத்தவர்கள் என்னைத்தொடர்பு கொண்டு, நிறைய செய்திகளை அறியும் தமது ஆவலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சிலர் தமது ஆதங்கங்கள்,ஆர்வங்கள்  பலவற்றையும் சொல்லிக் கொண்டார்கள்...

எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன்....

ஒரு பள்ளிக்கூடத்தின் துவக்கத்தை அறிந்திட இத்தனை வேட்கையா....?..என்று எனக்கு வியப்பு மேலிட்டது...

இது ஒருபுறம் இருக்க.....” இவனுக்கு எத்தனை வயசு ஆகுதாம்?....கூட இருந்து பார்த்த மாதிரி பீலா விட்ருக்கான்........வரலாற்றை புரட்டி எழுதுகிறான்.”.....என்றெல்லாம் எனக்கு வேண்டியவர்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.....

எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

என் தந்தையிடம் வளர்ந்ததைப் போன்றே என்னுடைய மாமா மேலப்பாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளித் தாளாளராக முப்பது ஆண்டு காலங்கள் பணி செய்த வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரகுமான் சாகிப் அவர்களிடம் வளர்ந்தேன்..

 மாமா... பல நேரங்களில் என்னை கட்டுரைகள் கவிதைகள்,மேடைப் பேச்சுக்கள் எழுதச்சொல்லுவார்கள்...பள்ளிக் கூடத்துப் பேச்சுக்கள் வரும் போதெல்லாம் பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் சொல்லுவார்கள்..
அவைகள் என்னிடம் குறிப்புகளாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்...
என் வாப்பா ,மற்றும் பெரியவாப்பா எல்.கே.எஸ்.எம்.காதர் மீரான் அவர்கள் பாதுகாத்து வைத்து எங்கள் குடும்பத்தில் இருக்கிற பல்வேறு தஸ்தாவேஜுக்களும் பள்ளியின் வரலாற்றை எனக்கு சொல்லுகின்றன.

என்னைப்பொறுத்தமட்டில்....மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது தனிப்பட்ட யாருக்கும்  சொந்தமானதல்ல....கமிட்டிக்கு உரியது..யாராலும் தன்னந்தனியே உருவாக்கப்பட்டதல்ல....பலர் அதன் பின் புலமாவார்கள். அதற்குப் பெருமளவில்  உழைத்தது வக்கீல் சாகிப் என்கிற  கொ.அ.மு.ஹமீது சாகிப் ஆவார்...

மேலப்பாளையம் ஊரை வாழ வைத்த , நூல் பாவுகள் ,கைத் தறிகள் கணக்கிட்டு மகமைகள் மூலமாக சல்லிக்காசுகள்....அணாக்கள்....பைசாக்கள் ....ரூபாய் நோட்டுக்கள் .... என்று ஊர் நெசவாளிகள்,வியாபாரிகள்,முதலாளிகளிடமிருந்து  எவை கிடைத்தாலும் ....நன்கொடை வாயிலாக வசூல் செய்தார்.....அதனால் முஸ்லிம் பள்ளி உயிர் பெற்று எழுந்தது...ஒவ்வொரு சல்லிக் காசிற்கும் கணக்குகள் விபரங்கள் வைத்திருந்தார்...


ஒரு காலத்தில் வக்கீல் ஹமீது சாகிப் மேலப்பாளையத்தில் ஏறி இறங்காத படிக்கட்டுகளே ஊரில் இல்லை என்பார்கள்.
.....மிகப்பெரிய வியாபாரக்குடும்பத்தில் பிறந்து, கற்றறிவாளராக உயர்ந்த ஹமீது சாகிப்....தமது இளமைக் காலம் முழுவதையும், அலமாரிகள் முழுக்க கேஸ்கட்டுகளாக இருந்த வழக்கறிஞர் பணியை கைகளில் கொண்டு கோர்ட்டுகளுக்குச் செல்லாமல்.....குடும்பத்திற்கே செல்வாக்கும் பெருமையும் தேடித் தந்த வியாபரத்திற்கும் செல்லாமல் ...விடிந்தால் பொழுதால்...சதா சர்வ காலமும்  பள்ளிக்கூடம் என்றே வாழ்ந்தார்.

அதனால் அவர் இழந்தது ...கோடிக்கணக்கான சொத்துக்கள்.....அவரது வாரிசுகளின் வளமான வாழ்வு என்று துணிந்தே சொல்லலாம்.....

பள்ளி உருவாக, அவரது உழைப்பிற்கு பக்க பலமாக இருந்தவர்கள் மேலப்பாளையம் வள்ளல்கள்  ‘கான் சாகிப் .’...டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனார்,கொ.அ.மு.செய்யது முகம்மது ,முகம்மது அலி, ஜமால் செய்யது முகம்மது ஆலிம்,  பருத்தி சாகுல் ஹமீது-ஹனீபா சகோதரர்கள், சமாயினா யூசுப் லெப்பை....மூளி.கலந்தர்லெப்பை...மோத்தைமதார்...ஆ.ம.மீராமுகைதீன்,வ.சே.ஷேக்மன்சூர்,அ.ம.அப்துல்லா,புலவர் செய்யது அகமது,லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப், உள்ளிட்ட முதல் தலைமுறை பெருமக்கள்  ஆவார்கள்...  

இன்னொரு உண்மையையும் சொல்ல வேண்டும்....பள்ளிக்கு உதவிகள் பல செய்த வள்ளல்கள் அனைவரும் இந்திய  நாட்டின்  விடுதலைக்கு முன்னர்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில் ஒன்றாக சமூகப்பணியாற்றிவர்கள் என்பது தான்...

அவை பற்றிச் சொல்லும் நேரத்தில் ,அரசியல் வெறுப்புகள் வந்துவிடக்கூடாதே என்றும் எண்ண வேண்டியதுள்ளது...

பள்ளிக்கூடம்  முஸ்லிம் கல்விக்குழுவிற்கு முழுக்க உரியது....அக்குழுவில் ஊரைச்சார்ந்த யாரும் உறுப்பினராகலாம் .....யாருக்கும் தடையில்லை .அந்த நாள் எப்போதும் உண்டு.என்கிற விதி முறைகளையும் ஆக்கிவைத்தார்கள்.

இல்லாத.....பொல்லாத அவதூறுகளை தம் வலிமையால் பரப்புவது கண்டு பொறுக்காமல் தான் எழுதத் துவங்கினேன்.....இல்லாவிட்டால் பள்ளிவரலாறு ....எனது வேலைப்பளுவின் காரணமாய் எப்போது வரும் என்று என்னால் குறிப்பிட முடியாமல் போயிருக்கும்.
சிலரைப்பற்றி இன்னும் அதிகமாக அடையாளம் காட்டவேண்டியதுள்ளது....
மறைந்துள்ள  பல்வேறு தகவல்களை வெளியிட்டு,பல பேருள்ளங்களை  உண்மையான தியாகத்தினை வெளிக்கொண்டு வர வேண்டியதுள்ளது...

பள்ளியின் வரலாற்றைத் தொடர்வோம்.

கருத்துகள் இல்லை: