வியாழன், 3 அக்டோபர், 2013

1993ஆம் ஆண்டு.மேலப்பாளையம் க முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபுபக்கர் அவர்கள்'மீரான் நீ பள்ளிக் கூட கமிட்டிக்கு உறுப்பினராக,பாரம் தரோம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் புதிய உறுப்பினராஅதுல கையெழுத்துப்போட்டு தப்பா"என்று என்னிடம் சொல்லி பள்ளியின் கல்விக் கமிட்டி உறுப்பினராக என்னை சேர்த்துக்கொண்டார்.
என் வாப்பவிடம் சேர்மன் இப்படிச்சொல்லுகிறார் நான் கைஎழுத்துப்போடவா?என்று கேட்டேன்.
பள்ளிக்கூடத்தை எங்க வாப்பா1941ல் டி.எஸ்.எம்.ஓஉதுமான் சாகிபோட சேர்ந்து ஆரம்பித்தார்கள்.உனக்கு சேர்மன் காக்கா அழைத்து அங்கீகாரம் தருகிறார்.சரின்னு சொல்லு.ஒன்ன மனசில வச்சுக்கோ,நீ அவர் ஆளா போறே,அவர் நாலும் நாலும் பத்துன்னா நீயும் அதத்தான் சொல்லனும்,தெரியுதா?அப்படீன்ன போ.இல்லன்னா வேண்டாம்.அவர் அதிகாரம் செய்யிற இடத்தில அவருக்கு முழு ஆதரவாளனா இருக்கனும்.மனசில வேற எண்ணம் ஏதும் வரக்கூடாது தெரியுதா?என் தந்தை எனக்கு இதைத்தான் சொல்லி அனுப்பினார்.
தன்னுடைய மகன்களைவிட மேலான அன்பு அவருக்கு என் மேல் இருந்தது.
ஒரு முறை பள்ளி வளர்ச்சி நிதி வசூலிக்க மெட்ராஸ் போன இடத்தில எனக்கு கடுமையான காச்சல் வந்து ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.
சேர்மன் எம்.எ.எஸ்.அவர்கள் நீண்ட தூரம் நடந்து போய் மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார்.வேறு நபரிடம் வாங்கி வரச்சொன்னால் மருந்து வந்துவிடும்.ஆனால் நான் பட்ட பாட்டைப் பார்த்து அவரே சென்று அதை வாங்கி வந்து என்னை படுக்கையில் இருந்து தூக்கி உட்ட்கார வைத்து என் வாயில் மாத்திரைகளைப் போட்டு அவரே ஒவ்வொரு மிடக்காக தண்ணீரைத்தந்தார்.அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?என்றால் சொல்ல முடியாது.

கருத்துகள் இல்லை: